Friday, November 29, 2013

மாவனெல்லை விவகாரம் பிரதேச செயலாளரின் உறுதிமொழியை அடுத்து பிக்குகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

Friday, November 29, 2013
இலங்கை::தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி மாவனெல்லை நகரில் பிக்குகள் 8 பேர் சாகும் வரையான சாகும்வரை உண்ணாவிரதத்தை நேற்று முற்பகல் ஆரம்பித்திருந்தனர்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரயே அமித்த தம்ம,மாகல்கந்தே சுதத்த,ரத்னபுரே நந்தாலோக,மெதிரிகிரியே புண்யாஸார,அம்பத்தலாவே சங்கரத்ன, சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த,திரியாயே சீலரதன,மெதிரிகிரியே சுதத்த ஆகிய தேரர்கள் கலந்துகொண்டிருந்தனர் .

தெவனகல புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத நிகழ்வில் பெரும் தொகையான பொதுமக்களும் கலந்துகொள்ளவில்லை என்பது குருப்பிடத்தக்கது. இதேவேளை மவனெல்லையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் இடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை மாவனெல்லை பிரதேச செயலாளர் அவர்கள் உண்னாவிரதம் நடைபெறும் இடத்துகு வருகை தந்து இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதைத்து இன்னும் ஒரு கிழமைக்குள் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தார். அதனை தொடர்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

No comments:

Post a Comment