Saturday, November 30, 2013

தி.மு.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: அ.தி.மு.க. புகார்!!

Saturday, November 30, 2013
சென்னை::ஏற்காடு தொகுதியில் தோல்வி பயத்தில் தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக இரவோடு இரவாக பணம், வேட்டி, சேலைகள், மதுபானங்களை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்திடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த கடிதத்தை தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இந்த புகார் மனுவை தலைமை தேர்தல் ஆணையரிடம் அளித்தனர். 
 
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தக்க நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார். 
இது குறித்து அ.தி.முக தலைமை கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
 
ஏற்காடு தொகுதியில் தோல்வி பயத்தால் தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் வன்முறை மற்றும் அராஜகத்தில் ஈடுபடுவது குறித்து கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 27ம் தேதி அன்றுதலைமை ம் த ர் த ல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 
இக்கடிதத்தை கழக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக மக்களவை குழு தலைவருமான மு.தம்பிதுரை தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் கொடுத்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தார். தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் ஏற்காடு சட்டமன்ற தொதிக்குள் தி.மு.க.வின் தேர்தல் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். கடந்த 2009ம் ஆண்டு
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தைப் போன்று ஏற்காடு தொகுதிகளிலும் செய்து வருகின்றனர்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி மற்றும் எஸ்.ஆர்.சிவலிங்கம் தூண்டு தலின்பேரில் தொகுதியில் உள்ள தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை கொடுத்து வருகின்றனர்.
 
முன்னாள் தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவும், அவரது ஆதரவாளர்களும் காலை 4 மணி அளவில் வாக்காளர்களுக்கு ஓட்டு ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் விநியோகித்து வருகின்றனர். கடந்த 22ந் தேதி எ.வ.வேலு பணம் விநியோகித்தபோது, விநி யோகித்ததை கண்டு பிடித்து தேர்தல் அதி காரிகளிடம் தெரிவித் தோம்.
 
ஆ ன ட் ல் அ வ ர் களால் அதை தடுக்க முடியவில்லை. அதிகாலை நேரத்தில் பணம் விநியோகிப்பதால் தேர்தல் அதிகாரிகளால் அதை கண்டறியமுடியவில்லை. தொகுதி முழுவதும் தி.மு.க. குண்டர்களையும், ரவுடிகளையும் ஏவி விட்டு பணம் விநியோகம் செய்தனர்.
 
டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்தவர் கள் அப் பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களின் உதவியோடு வாக்காளர் களுக்கு பணம் கொடுப்ப தோடு, அப்பாவி வாக்காளர்களை மிரட்டவும் செய்கின்றார்கள். 
தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று வாக்காளர்களை மிரட்டு கிறார்கள்.
 
பல இடங்களில் இது போன்ற வன்முறை மற்றும் அராஜகத்தை அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26ந் தேதி தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது அதை தடுத்த கழகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என் பவரை பெரிய கவுண்டா புரம் என்ற கிராமத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் ந் ச ய் த தவறுகளை மறைக்க கழகத்தின் மீது தி.மு.க.வினர் தவறான குற் ற ச் ச ட்ட்டுக் களை சுமத்தி வருகின்றனர்.
 
கடந்த 2009ம் ஆண்டு திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க.வினர் எத்தகைய முறைகேடுகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டார்களோ, அதே போன்று ஏற்காடு சட்ட மன்ற தொகுதியிலும் செய்து பழியை கழகத்தின் மீது சுமத்தி வருகின்றனர். தி.மு.க.வினர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் தமிழக அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, பா.வளர்மதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உண்மையில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதா ர மற்றவை என்பதை உறுதி யுடன் தெரிவித்துக் கொள் கிறேன். 
 
தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, தேர்தல் ஆணை யத்திடம் கழகத்தைப்பற்றி தவறான தகவல்கள் அடங்கிய மனுவை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் தவறை மறைப்பதற்காக அவர் எங்கள் மீது திசை திருப்பியுள்ளார். ஏற்காடு தொகுதியில் தி.மு.க. எந்த அளருக்கு விதிமுறைகளை மீறியுள்ளது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
தி.மு.க. எம்.பி. கனிமொழி இத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது அவரது காருக்கு பின்னால் 100 கார்கள் அணிவகுத்து வந்தனர். அதன் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் சகோதரி தேன்மொழி புடவை களை த ன் காரில் வைத்துக்கொண்டு வ ட் க் க ட் ள ர் களுக் கு விநியோகம் செய்தபோது கையும், களவுமாக பிடிபட்டார். அந்த காரில் 800 புடவைகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். வ_ழக்கு பதிவு செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை.
 
தி.மு.க.வைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வேட்டிகளை விநியோகம் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
இதேபோன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தகாக ஆதிசங்கரர் எ ம் . பி . யு ம் ம ற் று ம் தி.மு.க.வினர் மீது வ_ழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலுசின்னகவுண்டாபுரம் என்ற ஊரில் வாக்காளர்கள் 50 பேருக்கு பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டது. அப்போது 21 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக ஆதிசங்க ர் எம் .பி. , டி.எம்.செல்வகணபதி எம்.பி. மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் மீதும் வ_ழக்கு பதிவு செய்யப்பட்டு 77,675 ரூபாய் பணமும், டி.என்.21 சி.பி. 9495 என்ற பதிவு எண் உள்ள இனோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. குப்புச ட்மி என்ற தி.மு. க . உறுப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வ_ழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு பணம் 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
தி.மு.க. இளைஞர் அணியைச் ம்
ச ர் ந் த கண்ணாயிரம் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வ_ழக்கு பதிவு செய்து 10,890 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கழகத் தெ ட்ண்டர் களையு ம் தாக்கியதாக செல்வ கணபதி எம்.பி. மற்றும் தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புகைப்படங்களை இத்துடன் தங்களுடைய கவனத்திற்காக இணைத்துள்ளேன். தும்பல் பஞ்சாயத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த கணேசன் என் பவர் பணம் கொடுத்த போது அவரை தடுத்த க ட்வல்துறை உ தவி ஆய்வாளர் தாக்கப்பட் டுள்ளார்.
 
இதுபோன்று தி.மு.க. வினர் பல சட்டவிரோத அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர் கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக் கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக கீழ்கண்ட ந ட வ டி க் நி க க நி ள எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 1. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தவேண்டும். 2. வேட்டி, சேலைகள், மதுபானங்கள் முதலி யவற்றை வழங்குவதும் தடுக்கவேண்டும்.
 
3. தி.மு.க.வினர் வாக்காளர்களை விரட்டுவதும், தொகுதி முழுவதும் அவர் கள் நடத்தும் வன்முறை மற்றும் அராஜக செயல் களை தடுத்து நிறுத்த வேண்டும். 4. ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திர மாகவும் நடைபெற தி.மு.க.வினர் செய்யும் தேர்தல் விதிமுறைகள் நடவடிக்கைகளையும், சட்டவிரோதச் செயல் களையும் தடுத்து நிறுத்த வேண்டும். 
 
இவ்வாறு கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்று அ.தி.மு.க.வின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment