Saturday, November 30, 2013

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ( இன்டர்போல் ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

Saturday, November 30, 2013
இலங்கை::பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச
பொலிஸார் ( இன்டர்போல் ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
 
இவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகள் , நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .
 
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வெளியில் பல நாடுகளில் வசித்து வருகின்றனர் . அவர்களில் நான்கு பேர் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர் என இன்டர்போல் தெரிவித்துள்ளது .
 
பிரித்தானியாவில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் வங்கி உரிமையாளர் எனவும் இவர் விடுதலைப் புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் என்றும் கூறப்படுகிறது .
 
மேலும் இவர்களை கைது செய்ய ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் , இன்டர்போல் பொலிஸாருக்கு உதவி செய்கின்றனர் .

 

No comments:

Post a Comment