Friday, November 29, 2013

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
 
புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான்கு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
இந்த மீனவர்கள் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நான்கு படகுகளும் கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, இந்திய கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இலங்கை மீனவர்களை அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 
இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் ராமாயபட்டணம் கடற்பரப்பினுள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக 
தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 
அத்துடன் இலங்கை மீனவர்களின் படகொன்றும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கைதான ஆறு மீனவர்களும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் அந்த நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment