Thursday, October 31, 2013

கொழும்பு, கசினோ சூதாட்டத்தில் வென்ற கொரிய பெண் பிரஜையின் பணம் திருட்டு: களவாடிய பெண்ணைக் காட்டிக் கொடுத்த கெமரா!!

Thursday, October 31, 2013
இலங்கை::கொழும்பு ஐந்து நட்­சத்­திர ஹோட்ட­லொன்றில் தங்­கி­யி­ருந்த கொரிய பிர­ஜை­யொ­ரு­வரின் 9 இலட்ச ரூபா திரு­டப்­பட்­டது தொடர்­பாக கொம்­பனித் தெரு பொலிஸார்  விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

கொரிய பிர­ஜை­யுடன் ஹோட்டல் அறை­யி­லி­ருந்த இனந்­தெ­ரி­யாத பெண்­ணொ­ருவர் இப்­ப­ணத்தை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்த கொரியப் பிரஜை கடந்த 2 ஆம் திகதி டி.ஆர். விஜ­ய­வர்­தன மாவத்­தை­யி­லுள்ள கெசினோ சூதாட்ட விடு­திக்குச் சென்று 6,600 அமெ­ரிக்க டெலர்­களை சூதாட்­டத்தில் வென்­ற­தா­கவும் விடு­தி­யி­லி­ருந்து ஹோட்­ட­லுக்கு வாக­ன­மொன்றில் சென்­ற­ போது வாகன சாரதி மூலம் அறி­மு­க­மான இந்தப் பெண்ணை ஹோட்­ட­லுக்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

கொரியப் பிரஜை இந்தப் பெண்­ணுடன் இரவைக் கழித்­த­தா­கவும் மறு­தினம் காலை எழுந்து பார்த்­த­போது பெண் அறையில் இல்­லா­ததால் அறையை சோத­னை­யிட்­ட­போது முதல் நாள் கெசி­னோவில் வெற்­றி­பெற்ற, 6,600 அமெ­ரிக்க டொலர்கள் உட்­பட அவ­ரி­ட­மி­ருந்த 33,000 ரூபா இலங்கைப் பணமும் காணாமற் போனதை அறிந்து கொம்­பனித் தெரு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

ஹோட்­டலில் பொருத்­தப்­பட்­டி­ருந்த பாது­காப்பு கெம­ராவை பரீட்­சித்­ததில் இப்பெண் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கொம்பனித்தெரு பொலிஸார் இப்பெண்ணைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment