Thursday, October 31, 2013

அன்று புலிகளினால் துப்­பாக்கி முனையில் விரட்­டப்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இன்று வரை ஆத­ரவு கிடைக்­க­வில்லை: விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் நாடகமாடாது முஸ்லிம்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்!

Thursday, October 31, 2013
இலங்கை::புலிகளினால் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்­களை வெளி­யேற்­றி­ய­மைக்கு வடக்குத் தமி­ழர்­களும் பொறுப்புக் கூற வேண்டும். அன்று துப்­பாக்கி முனையில் புலிகளினால் விரட்­டப்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இன்று வரை ஆத­ரவு கிடைக்­க­வில்லை.
 
விக்கி­னேஸ்­வ­ரனும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் நாட­க­மா­டாது முஸ்லிம் மக்­களின் நிலங்­களை உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்டும் என்று முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
பிர­பா­க­ரனால் முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றன. இதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் மேற்­கொள்­ள­வுள்ளோம் எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
செள­சி­ரி­பா­யவில் நேற்று முன்­தி­னம் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்­தனர்.
 
இது தொடர்­பாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் அர­சியல் குழுத் தலை­வ­ரு­மான மொஹமட் முசம்மில் கருத்துத் தெரி­விக்­கையில்,
 
வடக்கில் இருந்த அப்­பாவி முஸ்லிம் மக்கள்  புலி­க­ளினால் வெளி­யேற்­றப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றது. அன்று ஆயு­த­மு­ணையில் அப்­பாவி மக்­களை வெறும் 500 ரூபா­வுடன் விரட்­டினர். முஸ்லிம் பெண்­க­ளையும் வய­தா­ன­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி அவர்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்து ஒரு அரா­ஜ­க­மான செயலே அன்று பிர­பா­கரன் செய்தார். பின்னர் இலங்கை இரா­ணு­வத்­தினர்  அர­சாங்­கத்­துடன் சேர்ந்து செய்­து­மு­டித்த யுத்த வெற்­றி­யோடு நாட்டில் இருந்த தீவி­ர­வாதம் முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
 
எனினும் தற்­போது வட மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் முஸ்லிம் மக்­களை ஆத­ரிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர்.
 
வடக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் வாழ்­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதனை குழப்பும் வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் செயற்­ப­டக்­கூ­டாது விக்­கினேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் பொய்­யான கருத்­துக்­களை கூறி மக்­களை ஏமாற்­றாது குறித்த கால எல்­லைக்குள் முஸ்லிம் மக்­களை குடி­ய­மர்த்த வேண்டும்.
 
புலி­க­ளினால் அப­க­ரிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­களின் நிலங்­களை மீண்டும் அம் மக்­க­ளுக்கே ஒப்­ப­டைக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பினர் மெள­லவி எம். எப். பாரூக் தெரி­விக்­கையில்,
 
நாம் சகோ­த­ரத்­து­வத்­துடன் இலங்­கையில் அனைத்துப் பகு­தி­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்றோம். இதே நிலைமை வடக்­கிலும் ஏற்­பட வேண்டும். இலங்­கையில் வாழும் முஸ்லிம் மக்­களில் மூன்றில் இரண்டு பகு­தி­யினர் சிங்­கள மக்­க­ளு­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­தாலும் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யினை வாழ­வில்லை.
 
இன்று 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான முஸ்லிம் குடும்­பங்கள் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். இதற்கு தமிழ் மக்கள் பெறுப்­புக்­கூற வேண்டும். இன்று வடக்கில் வாழும் தமி­ழர்கள் முஸ்லிம் மக்­களை ஆத­ரித்து அவர்­களின் இடங்­களை ஒப்­ப­டைக்க அர­சாங்கம் உதவி செய்ய வேண்டும். தமிழர் சிங்­க­ள­வர்­களைப் போல் முஸ்லிம் மக்கள் யுத்­தத்­தினை விரும்­பு­வ­தில்லை அவர்கள் அனைத்து இனத்­த­வர்­களும் இணைந்து அமை­தி­யாக வாழ எப்­போதும் நினைப்­ப­வர்கள். இதனை வடக்கில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
எமக்கு கிடைக்க வேண்­டிய உரி­மை­க­ளுக்­காக நாம் தொடர்ந்தும் போரா­டுவோம். எமக்கு வடக்கு, கிழக்கு இணைப்­பினை விடவும் முஸ்லிம் மக்­களின் உரி­மை­களே முக்­கி­ய­மா­னது. அதை புரிந்து கொண்டு அர­சாங்­கமும் வடக்கின் கட்­சி­களும் செயற்­பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டிவிட்டமைக்கும் வடக்கில் மீண்டும் மக்களை குடியமர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment