Saturday, October 05, 2013
இலங்கை::சம்பந்தன் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் சம்பந்தன் பிரிவினை வாதத்தினை கைவிட வேண்டும்.
இலங்கை::சம்பந்தன் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் சம்பந்தன் பிரிவினை வாதத்தினை கைவிட வேண்டும்.
வடமாகாண சபை இயங்கத் தொடங்கியவுடன் காணி அதிகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வியாக்கியானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி நிற்கும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதியை சம்பந்தன் சந்தித்து பேசுவது நல்லது. ஆனால் பிரிவினைவாத கோரிக்கையை கைவிட வேண்டியது கட்டாயமானதாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் 33 (டி) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாகாண சபைகளால் விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக குத்தகைக்கு காணிகளை வழங்க முடியும்.
அதுவும் தற்காலிகமான அடிப்படையிலேயே அதனை மேற்கொள்ள முடியும். அதேவேளை, காணிகளை வேறொருவருக்கு சொந்தமாக வழங்கும் அதிகாரம் மாகாண சபைக்கு கிடையாது. அந்த அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது.
இதற்கான தீர்ப்பையே அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கியது. இவ்வாறானதோர் நிலையில் வடமாகாண சபை இயங்க ஆரம்பித்ததும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக காணிகள் தொடர்பில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை கோரியும் அதற்காக உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையும் கோரி நிற்பது உறுதியாகும்.
இந்தியா
கூட்டமைப்பின் இம் முயற்சிக்கு இந்தியா பூரண ஆதரவை வழங்கும். எப்படியாவது 13 ஆவது திருத்தத்தில் எதுவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது முழுமையாக அமுல்படுத்துவதே இந்தியாவின் திட்டமாகும்.
குர்ஷித்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்வது வடமாகாண சபையுடன் அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்பதை வற்புறுத்துவதற்கே ஆகும்.
அத்தோடு வடமாகாணத்தின் அபிவிருத்திகளில் இந்தியாவின் நேரடித் தலையீடுகளும் இவ் விஜயத்தின் பின்னர் அதிகரிக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் அரசியல் கட்சியாகும். எனவே சம்பந்தன் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் சம்பந்தன் பிரிவினை வாதத்தினை கைவிட வேண்டும். மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment