Thursday, October 31, 2013

எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது!

Thursday, October 31, 2013
தூத்துக்குடி::எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கன்னியாகுமரி கடற்பரப்பில் தென்பகுதியில்  4 படகுகளில் 24 இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் கடலோர காவல்படைக்குத் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடந்து 24 இலங்கை மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
 
கன்னியாகுமரி கடல் பகுதியில் 90 கடல் மைல் தொலைவில் கடலோர காவல் படைக்கு சொந்தமான "வைபவ்' கப்பல் கமாண்டன்ட் சஞ்சீவ் திர்க்கா தலைமையில் ரோந்து பணியில் இருந்தது.
 
நேற்று காலை 8 மணியளவில், இலங்கையை சேர்ந்த 4 படகுகளில், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த, 24 மீனவர்களையும் சுற்றி வளைத்து, கடலோர காவல் படையினர் பிடித்தனர்.
 
இதே போல் அக்., 9 ல் கன்னியாகுமரி கடலில், வடகிழக்கு பகுதியில் இந்திய எல்லையில் மீன் பிடித்த 4 படகுகள், 26 மீனவர்கள் பிடிபட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இலங்கையை சேர்ந்த 8 படகுகள், 50 மீனவர்களை கடலோர காவல் படையினர் பிடித்துள்ளனர்.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment