Wednesday, September 18, 2013
இலங்கை::நாட்டின் மீது அன்பு செலுத்துபவருக்கு மாத்திரமே தலைவராக இருக்க முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் ஆணமடுவ - வில்பத்துவ பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமது நாடு குறித்து பெருமையடைய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பெரியாளாக முடியாது. நாட்டை நேசிக்காதவரால், நாட்டு தலைவராக முடியாது. அவ்வாறானவர்களை நாட்டு மக்களும் நேசிக்க மாட்டார்கள்.
புத்தளம் ஆணமடுவ - வில்பத்துவ பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமது நாடு குறித்து பெருமையடைய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பெரியாளாக முடியாது. நாட்டை நேசிக்காதவரால், நாட்டு தலைவராக முடியாது. அவ்வாறானவர்களை நாட்டு மக்களும் நேசிக்க மாட்டார்கள்.
கண்டியை ஆட்சிசெய்த இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த எமது நாட்டின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விளங்குகிறார். இன்று அவர் எமது நகருக்கு வருகை தந்தபோது பெரிய பள்ளிக்கும் விஜயம் செய்தார்.
புத்தளம் பெரிய பள்ளிக்கு 1720 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் வருகை தந்து , புத்தளம் மக்கள் செய்த சங்கைக்காக தனது உத்தியோக பூர்வக் கொடி, வெண் சாமரைகள் இரண்டு, 18 வெள்ளிக் குஞ்சங்கள், பாரிய ஊது குழல் ஒன்று ஆலவட்டங்கள்,கொடிகள், காழா விளக்கு எனப்படும் பூமணி விளக்குகள் போன்றனவற்றை பள்ளிக்கு அன்பளிப்பு செய்தான். இன்று அவற்றுள் எஞ்சி இருப்பது வெண் சாமரையும், ஊது குழலின் ஒரு பகுதியும் மட்டுமே. ஜனாதிபதியவர்கள் தமது விஜயத்தின் போது இவற்றைப் பார்வையிட்டதுடன் கட்டிடக் கலையம்சம் வாய்ந்த பள்ளியையும் பார்வையிட்டார்.
புத்தளம் நகர முதல்வர் கே ஏ பாயிஸ் அவர்களுடன் சமூகமளித்த ஜனாதிபதியை பெரிய பள்ளிவாயலின் பரிபாலன சபைத் தலைவர் முஸம்மில் ஹாஜியார், புத்தளம் மாவட்ட ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவரும் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் காதி நீதிபதி மௌலவி நெய்னா முஹம்மத்(காஸிமி) ஆகியோர் வரவேற்றனர்.ஹிஷாம் ஹுசைன் அவர்கள் ஜனாதிபதியை வரவேற்று சிங்களத்தில் உரையாற்றினார்.
எதிர்வரும் 21 ம் திகதி சனிக்கிழமையன்று தனது 75 வருடத்தை பூர்த்தி செய்யவிருக்கும் இப்பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி வருகை தந்தது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நிகழ்வாகக் கருதப்படுகின்றது.






No comments:
Post a Comment