Monday, September 30, 2013

வடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது: கேஹலிய ரம்புக்வெல!

Monday, September 30, 2013
இலங்கை::வடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது
அரசாங்கத்தின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல அரசாங்கத்தின் குறி;த்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்
மாகாணசபைகள் அந்த சபைகளுக்கு வழங்கப்பட்டு;ள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்லமுடியாது
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்த காலத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார் என்று ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்
இதேவேளை இலங்கையின் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்துக்கு உரியவை என்று தீர்ப்பை வெளியிட்டமையானது தெளிவான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ரம்புக்வெல குறிப்பிட்டார்;

No comments:

Post a Comment