Tuesday, August 13, 2013

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 24 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நவ­நீதம்பிள்ளை விசேட உரை­யாற்­றுவார்!

Tuesday, August 13, 2013
இலங்கை::ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 24 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. செப்­டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் பல்­வேறு நாடு­களின் மனித உரிமை நிலை­வ­ரங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.
 
ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளையின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்த 24 ஆவது கூட்டத் தொடரில் உறுப்பு நாடு­களின் பூலோக காலக்­கி­ரம மீளாய்வு தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.
47 உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ள நிலையில் உறுப்­பு­ரி­மை­யற்ற நாடுகள் சில­வற்றின் பிர­தி­நி­தி­களும் விசேட கூற்­றுக்­களை வெளி­யி­ட­வுள்­ளனர். சில நாடு­க­ளுக்கு எதி­ராக விசேட பிரே­ர­ணை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன.
 
இலங்­கையை பொறுத்­த­வரை இம்­முறை கூட்டத் தொடரில் அமைச்­சர்கள் மட்டத் தூதுக்­கு­ழுவா அல்­லது அதி­கா­ரிகள் மட்ட தூதுக்­கு­ழுவா கலந்­து­கொள்­வது என்­பது குறித்து இது­வரை முடி­வெ­டுக்­கப்­ப­டாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் இன்னும் ஓரிரு வாரங்­களில் தீர்­மா­னிக்­கப்­படும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.
கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 23 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கை­யி­லி­ருந்து அதி­கா­ரிகள் மட்டத் தூதுக்­கு­ழுவே கலந்­து­கொண்­டி­ருந்­தது.
எனினும் இவ்­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெற்ற பேர­வையின் 22 அவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் அமைச்­சர்கள் மட்ட குழு கலந்­து­கொண்­டி­ருந்­தது. மனித உரிமை விவ­காரம் குறித்த ஜனா­தி­ப­தியின் விசேட தூது­வ­ரான மஹிந்த சம­ர­சிங்க தலை­மை­யி­லான தூதுக் குழுவே 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொண்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், 24 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்­பிப்பார் என்று ஆரம்­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் தற்­போது அவர் அறிக்கை சமர்ப்­பிக்­க­மாட்டார் என்றும் விசேட கூற்­றையே வெளி­யி­டுவார் என்றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.
 
அதற்கு முன்னர் எதிர்­வரும் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் நவ­நீதம்பிள்ளை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். அந்­த­வ­கையில் இலங்கை தொடரில் பேர­வையின் கூட்டத் தொடர்பில் நவ­நீதம்பிள்ளை ஆற்­ற­வுள்ள உரை முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.

No comments:

Post a Comment