Tuesday, July 16, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார்: அரசாங்கம்!

Tuesday, July 16, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவி பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் சார்பில் இளவரசர்
சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, பிரித்தானியாவின் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய இறுதித் தீர்மனம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தங்களது பிரதிநிதிகளை இலங்கை அமர்வுகளுக்கா அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கு இந்த அமர்வு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment