Saturday, July 13, 2013

புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளானது!

Saturday, July 13, 2013
புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன . இலங்கையர்கள் உள்ளிட்ட 97 பேர் இந்தப் படகில் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் பயணித்த 88 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர்.
 
படகில் பயணித்த குழந்தையொன்றின் சடலத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
படகு உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment