Saturday, July 13, 2013

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியம் கிடையாது: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த!

Saturday, July 13, 2013
இலங்கை::வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் அரசியல் கட்சிகள் உள்நாட்டு கண்காணிப்பு பொறிமுறைமை குறித்து நம்பிக்கை கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தீய நோக்கங்களின் அடிப்படையிலேயே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு கோரி வருவதாகவும், குறிப்பாக வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏன் உள்நாட்டு பொறிமுறைமைய நம்ப முடியாது எனவும், நாம் எதனால் கண்காணிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கின் சகல நிர்வாக நடவடிக்கைகளும் சிவிலியன்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment