Monday, July 1, 2013

முல்லைத்தீவில் தமிழ் யுவதியை காதலித்துக் கரம் பிடித்த இராணுவ வீரர்!!

Monday, July 01, 2013
இலங்கை::தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் யுவதியொருவரை தனது பாரியாராக்கிக்கொண்ட திருமணம் நிகழ்வொன்று  நேற்று வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23ஆவது காலாற்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார (வயது 22) என்ற இராணுவ வீரருக்கும் முல்லைத்தீவு முள்ளியவலை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த மேரி தெரேசா (வயது 20) என்ற யுவதியுமே இன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.

இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்பை அடுத்தே திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவு 23ஆவது காலாற்படை முகாமின் தளபதி கேணல் சஷிந்திர விஜேவர்தன தெரிவித்தார்.  

No comments:

Post a Comment