Friday, July 12, 2013

உத்தேச 21வது அரசியலமைப்பு திருத்தம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்: சமல் ராஜபக்ஸ!

Friday, July 12, 2013
இலங்கை::உத்தேச 21வது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபித்து அரசியலமைப்பின் 121/1 பரிந்துரைக்கமைய தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 123வது பரிந்துரைக்கமைய மனுதாரர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி மனுவை தாக்கல் செய்திருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்தமானித்துள்ளது எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு அரசியலமைப்பின் 120  மற்றும் 124 பரிந்துரைகளுக்கு அமைய நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு முரணானது என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment