Tuesday, June 11, 2013

தமிழகத்தில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு, பயிற்சி அளிப்பதை, மத்திய அரசு கைவிட வேண்டும்: ராணுவ அமைச்சர் அந்தோணியிடம் வாசன் புகார்!

Tuesday June 11, 2013
புதுடில்லி::தமிழகத்தில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு, பயிற்சி அளிப்பதை, மத்திய அரசு கைவிட வேண்டுமென, ராணுவ அமைச்சர் அந்தோணியிடம், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், வாசன் கோரிக்கை விடுத்தார்.
 
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன், டில்லியில் நேற்று, ராணுவ அமைச்சர் அந்தோணியை, சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்ள வெலிங்டனில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுவதாக, செய்தி வந்துள்ளது. இது மிகவும் வருத்தம்அளிக்கிறது.
தமிழகத்தில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை, மத்திய அரசு தவிர்க்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
 

No comments:

Post a Comment