Monday, June 3, 2013

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!

Monday, June 03, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உத்தேச புதிய அரசியல் சாசனம் தொ
டர்பில் பேச்சுவார்த்தை நடாத்தத்தயார் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட குறித்த உத்தேச அரசியல் சாசனமானது ஓர் வரைவுத் திட்டமே எனவும், இறுதி யோசனைத் திட்டம் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரித்தானியாவின் வெஸ்ட் மினிஸ்டர் முறைமையிலான அரசியல் சாசனமொன்றை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment