Tuesday, June 25, 2013

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்: வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Tuesday, June 25, 2013
இலங்கை::புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியா நோக்கி படையெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆபத்து கிடையாது என்ற காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இரு நாடுகளினதும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றமை நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
 
யுத்த நிறைவைத் தொடர்ந்தும் பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் தஞ்சமடைந்து
வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் பூரண சமாதானம் நிலவி வருவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் போது உண்மை நிலைமைகளை உலகிற்கு உணர்த்த முடியும் எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment