Saturday, June 1, 2013

மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு 39 வருட சிறைத்தண்டனை!

Saturday, June 01, 2013
இலங்கை::தனது மகளை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய தந்­தை­யொ­ரு­வ­ருக்கு வட­மத்­திய மாகாண உயர் நீதி­மன்றம் 39 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 75,000 ரூபா அப­ரா­தமும் பாதிக்­கப்­பட்ட புதல்­விக்கு ஒரு இலட்ச ரூபா நஷ்ட ஈடாக வழங்­கும்­ப­டியும் உத்­த­ர­விட்­டது.

மேற்­படி நபர் தமது மூத்த புதல்­வியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக பத்து வருட சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வரு­பவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

குற்­ற­வாளி அப­ரா­தத்­தையும் நஷ்­ட­ஈட்­டையும் வழங்­கா­விட்டால் மேலும் 21 மாத சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டு­மெ­னவும் தீர்ப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2008 ஜன­வரி 26 ஆம் திகதி முதல் 2008  ஏப்ரல் மாதம் 4 ஆம்­தி­கதி வரை­யி­லான காலப் பகு­தியில் தந்­த­ரி­மலை, நாமல்­வெவ,பகு­தியைச் சேர்ந்த இள வயது மகளை அவ்­வப்­போது கொடூ­ர­மான முறையில்  பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­ய­தாக இந்த நபர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

இவர் தனது மூத்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமைக்கு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டவராவார்.
 

No comments:

Post a Comment