Friday, May 31, 2013

எனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை: அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Friday, May 31, 2013
இலங்கை::எனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
 
அந்த பல சேனா, இந்த பல சேனா என எந்த பலசேனா வந்தாலும் எம்மைப் போன்ற மனிதர்களை கீழே தள்ள முடியாது.
கௌதம புத்தரின் தத்துவங்களில் எந்த இடத்திலும் சிங்கள பௌத்தம் பற்றி வலியுறுத்தியதில்லை.
 
கௌதம புத்தர் ஜாதி என்பது எதுவென்பதனை தெளிவாக விளக்கியுள்ளார்.
உண்மையில் ஜாதி என்பது மனித ஜாதியையே குறிக்கும் என கௌதம புத்தர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.
 
பௌத்த தர்மத்தில் எந்தவொரு இடத்திலும் பிக்குகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படவில்லை.
பொலிஸாருடன் அடித்துக் கொள்ளுமாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
 
வீதிகளில் இறங்கி கொலை செய், கொடு, வெட்டுவேன் என கோசமிடுமாறு பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்படவில்லை.
 
உலகின் பல நாடுகளில் மதங்களுக்கு இடையில் வாதங்கள் நடைபெற்றன.
எனினும், அவை கை கால்களைப் பயன்படுத்தி நடத்தப்படவில்லை அவை, புத்தியூடாக நடத்தப்பட்டது என அமைச்சர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பேருவள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment