Thursday, May 30, 2013

அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்!

Thursday, May 30, 2013
இலங்கை::அமெரிக்காவின் குற்றச் சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
 
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
 
கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அண்மைக் காலமாக அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.

No comments:

Post a Comment