Tuesday, May 14, 2013

கடற்படை கப்பல் மோதியதில் பாம்பன் பாலம் சேதம் : 16-ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்துக்கு தடை!

Tuesday, May 14, 2013
இராமேஸ்வரம்::பாம்பன் பாலத்தில் இன்று முதல் 16-ஆம் தேதி வரை ரயில்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பாம்பன் பாலம் மீது இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலத்தின் 121வது தூண் மீது மோதியது அப்போது ஏற்பட்ட சேதம் சரிசெய்வதை முன்னிட்டு திருச்சி- இராமேஸ்வரம் ரயில் மண்டபம் வரை இயக்கபடுவதாக ரயில்வே நிர்வாகத்தினர்  கூறியுள்ளனர். முற்றிலும் சேதம் அடைந்த தூணை அகற்றிவிட்டு புதிய தூண் அமைக்க பணிகள் மேற்கொள்ள பட்டுவருகின்றது பணிகள் முடிந்ததும் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment