Friday, May 31, 2013

வடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது!

Friday, May 31, 2013
இலங்கை::வடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு நடமாடும் சேவைகளை ஒழுங்கு செய்திருப்பதாக, தெரிவிககப்படுகிறது.
 
இதன்படி எதிர்வரும் 3 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், 5 ஆம் திகதி காரைநகரிலும், 6ஆம், 7ஆம் திகதிகளில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளன.
 
இதேபோன்று வடமாகாணத்தின் ஏனைய பகுதிளிலும் இந்த நடமாடும் சேவைகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment