Thursday, April 25, 2013

இலங்கை சட்டத்தரணிகளுக்கு பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம் ஆதரவு!

Thursday, April 25, 2013
London::பிரித்தானிய மற்றும் வேல்ஸ் சிரேஷ்ட சட்டதரணிகளுக்காக முன்நிற்கும் பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கத்தினால், இலங்கை நீதிபதிகள் மற்றும் சட்டதரணிகளுக்கு ஆதரவளிக்கும் யோசனை திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
 
சட்ட துறையின் சுயாதீனத் தன்மை, நீதி மற்றும் நியாயம் ஆகிய விடயங்கள் இந்த யோசனையில் உள்ளடக்கப்படுள்ளன.
முன்னாள் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையை தொடர்ந்தே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பில் பிரித்தானிய மற்றும் வேல்ஸ் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக பிரித்தானிய சட்டதரனிகள் சங்கத்தின் தலைவர் மௌரோ மெக்கோவன் அறிக்ககையொன்றின் மூலம் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்த நிலமையானது, இலங்கையின் நீதித்துறை சுதந்திரத்திற்கும் சட்டவாட்சிக்கும் அச்சுறுத்தலாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இத்தகைய செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் இலங்கை நீதிபதிகளுக்கும் சட்டத் தரணிகளுக்கும் தமது சங்கம் ஆதரவளிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment