Tuesday, April 30, 2013

'இது எங்க இடம்' பலகை, நாய்களுடன் சீனா!!

Tuesday, April 30, 2013
புதுடெல்லி::இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீரின் லடாக் பகுதியில் நுழைந்த சீன ராணுவம் தன் வேட்டை நாய்களுடன் மேலும் ஒரு கூடாரம் போட்டு அத்து மீறி வருகிறது, இதனால எல்லையில் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி டெண்டு போட்டு தங்கியது கண்டு பிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சீன ஊடுருவலை பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு உள்ளூர் பிரச்னை என்று மட்டுப்படுத்தினாலும் இந்திய சீன அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது.

மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் எவ்வித முடிவையும் கொடுக்காத நிலையில் சீன ராணுவம் மேலும் ஊடுருவி ஏற்கனவே போட்டிருந்த 4 டெண்டுகளோடு மேலும் ஒரு டெண்ட் என 5 கூடாரங்களை போட்டுள்ளது.

கூடாரங்களின் வெளியே வேட்டை நாய்களை வைத்துள்ள சீன ராணுவம் “நீங்கள் சீன எல்லையில் இருக்கிறீர்கள்” என்ற போர்டையும் மாட்டி வைத்துள்ளது.

சீன மக்ரோவ் துப்பாக்கிகளுடனும் ஏ.கே 47 ரக துப்பாக்கிகளுடன் சீன ராணுவத்தினர் ஊடுருவி நிற்க அதை தடுக்கும் விதத்தில் இந்திய ராணுவ வீரர்களும் நிற்பதால் எல்லையில் பதற்றம் தணியாமல் உள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்திய எல்லைப்பகுதியான லடக்கில் முகாமிட்டு அத்துமீறிவரும் சீன ராணுவம், தற்போது கூடா ஸரங்களை அதிகப்படுத்தி உடன் குளிர் தாங்க கூடிய நாய்களுடன், நீங்கள் சீன எல்லையில் இருக்கிறீர்கள் என்ற பலாகையுடன் சீன ராணுவம் தனது தொடர் அத்துமீறலை நடத்திவருகிறது.

No comments:

Post a Comment