Monday, April 29, 2013

வடமாகாண சபையைக் கைப்பற்றுவதற்கான நாடக அரங்கேற்றம்: தமிழ் தேசியக் புலி ஆதரவு கூட்டமைப்பு பயங்கரவாதிகளால் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!:-புலிகூட்டமைப்புக்குள் பிளவு: தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ கட்சிகள் இணைந்து பதிவு செய்துகொள்ள முடிவு!!


 Monday, April 29, 2013
இலங்கை::வடமாகாண சபையைக் கைப்பற்றுவதற்கான நாடக அரங்கேற்றம்: தமிழ் தேசியக் (புலி ஆதரவு) கூட்டமைப்பு பயங்கரவாதிகளால் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!:-புலிகூட்டமைப்புக்குள் பிளவு: தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ கட்சிகள் இணைந்து பதிவு செய்துகொள்ள முடிவு!!
 
 தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான திரு எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின் 36வது நினைவு தினத்தினை அனுஸ்டிக்கும் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பயங்கரவாதிகளை இங்கு காண்கின்றீர்கள். பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்றொழித்த  புலிகளின் ஸ்தாபகரான  பிரபாகரன் அவர்களுடன் இணைந்து பாராளுமன்றப் பதவிகளை தமதாக்கிய பயங்கரவாதிகள் எதிர்வரும் வட மாகாண சபைத்தேர்தலில் அங்கு வாழும் வாக்காளர்களின் வாக்குகளை சூறையாடுவதற்கான நாடக அரங்கேற்றத்தினை  ஆரம்பித்துள்ளார்கள். இவர்களைப் போன்ற அயோக்கியரோ, அன்றி பயங்கரவாதியோ அல்ல தந்தை செல்வா அவர்கள் என்பதனை வடமாகாண மக்கள் உணர்ந்து செயற்படத் தவறும் பட்சத்தில் வடமாகாண மக்களின் வாழ்வில் ஒளிவீசுவது கானல் நீரை நம்பிய மானின் கதையாகவே முடிவுறும் என்பதனை முன்கூட்டியே நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்..
 
புலிகூட்டமைப்புக்குள் பிளவு: தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ கட்சிகள் இணைந்து பதிவு செய்துகொள்ள முடிவு!!
 
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாநாட்டின் போதே இந்த தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு,

•    தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவு செய்யப்படவில்லை.

•    பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள், சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்க வேண்டும்.

•    ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.

•    இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் ஒரு முன்னணியாக, தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

•    தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இதில் சேர விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும்' என்ற தீர்மானங்கள் (புலி ஆதரவு) கூட்டமைப்பு பயங்கரவாதிகளால்) நிறைவேற்றப்பட்டன...
 
இலங்கையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இரண்டு வார காலக்கெடு விதித்துள்ளன.
 
அடுத்துவரும் இரண்டு வார காலத்துக்குள் ஐந்து கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், தமிழரசுக் கட்சி தவிர்ந்த நான்கு கட்சிகளும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பதிவுசெய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
இதுபற்றி தனது தலைமையிலுள்ள டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாகப் பதியவேண்டுமென்று கூட்டணிக் கட்சிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தும் அதற்கு தமிழரசுக் கட்சி உடன்படவில்லை என்றும் அவர் கூறினார்.
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எஃப், புளொட், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்துக் கூட்டணிக் கட்சிகளுமே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இயங்கிவருகின்றன.
ஆனால், புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டக் கட்சியாக தமது கூட்டமைப்பு அமைய வேண்டுமென்று மற்றக்கட்சிகள் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்துள்ளன.
 
ஒற்றுமையை வலியுறுத்தியே இதுவரை காலமும் தாம் காத்திருந்ததாகவும் ஆனால், எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் தமது கட்சிகளுக்கிடையில் ஒருமித்த கருத்து சாத்தியப்படாவிட்டால் நான்கு கட்சிகள் மட்டும் தனித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெலோ இயக்கத்தின் தலைவர் கூறினார்.
 
ஏனைய சக கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் தமது மத்திய குழுக்களைக் கூட்டி முடிவெடுத்த பின்னர், பதிவு விடயம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
புரிந்துணர்வுடன் தான் செயற்படுகிறோம்': தமிழரசுக் கட்சிஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே கட்டமைப்புக்குள் இயங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் தமக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தமிழோசையிடம் கூறினார்.
 
தமிழர் பிரதேசங்களில் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இராணுவ நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக போராட வேண்டிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் பிரச்சாரங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.
 
வட மாகாணசபை தேர்தல் நடந்தால், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போட்டியிடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். 

No comments:

Post a Comment