Tuesday, April 30, 2013

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிதிவெடி அகற்றும் பணிகள் 95 வீதம் பூர்த்தி!

Tuesday, April 30, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிதிவெடி அகற்றும் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளன. மேலும் 96 கிலோ மீற்றர் பிரதேசத்திலேயே மிதிவெடி அகற்ற வேண்டியுள்ளதோடு இந்தப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியது.
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மிதிவெடி அகற்றுதல் தொடர்பான தேசிய மத்திய நிலையம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
2009 ஜூன் மாதமாகும் போது 2,064 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் புலி களினால் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.
கடந்த 4 வருட காலத்தில் 1,968 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் இருந்து மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பிரதேசம் பற்றைக்காடு நிறைந்த பிரதேசம் எனவும் அமைச்சு கூறியது.
மிதிவெடி அகற்றும் பணிகள் வெற்றி கரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பல நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் படுகிறது.
 
இராணுவ பொறியியல் பிரிவு மிதிவெடி அகற்றும் பணியில் முக்கிய பங்காற்றி வருவதோடு அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, யுனெஸ்கோ ஆகிய நிறு வனங்கள் உட்பட பல உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன.

No comments:

Post a Comment