Thursday, March 28, 2013
இலங்கை::இலங்கையில் பலவந்தமாக மதமாற்றம் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் குறித்து பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுததுள்ளது
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த, பொதுபல சேனாவின் கிராம விமலஜோதி தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்
அரச சார்பற்ற இயக்கங்கள் சிலவும் இந்த மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேரர் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை தாம் எந்த மதத்துக்கும் எதிரான அமைப்பு அல்ல என்றும் விமலஜோதி தேரர் சுட்டிக்காட்டினார்,
இனவாதம் தூண்டுவோருக்கு எச்சரிக்கை!
இன மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் குறுஞ்செய்திகள் தொடர்பில் கவனமாக செயற்படுமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்
மத மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையில் குறுஞ்;செய்திகளை பரிமாற்;றம் செய்பவர்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்
எனவே இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் முறையிடுமாறு காவல்துறை தலைமையகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது

No comments:
Post a Comment