Saturday, March 30, 2013

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி வாகனங்கள், அறிவகம் அலுவலகம் மீது தாக்குதல்!

Saturday, March 30, 2013
இலங்கை::தமிழ்த் தேசிய  (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி வாகனங்கள், அறிவகம் அலுவலகம் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி அறிவகம் அலுவலகம் மீது கறுப்பு நிற முகமூடி அணிந்து சென்றுள்ள பொது மக்கள் சிலர் இன்று முற்பகல் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (புலி)கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் எஸ்.சிறிதரன் ஆகியோரின் வாகனங்கள் மீதும் மேற்படி  கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் அறிவகம் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போண்து அங்கு  நுழைந்துள்ள பொது மக்கள்   தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தேசிய கொடிகளுடன் வந்த கறுப்பு முகமூடி அணிந்த பொது மக்களே  இவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவ்வாறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் இருவர்  பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அவ்விருவரையும் பொலிஸார் விடுவித்ததாகவும் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  (புலி)பிரேமசந்திரன் தெரிவித்தார்...

கிளிநொச்சி நகரில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் கூட்டத்திற்கு இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


பேரணியாக வந்த சிலர் தமது கூட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைபின் பாராளுமன்ற உறுபபினர் ஈ.சரவணபவன்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment