Wednesday, March 13, 2013
எதிர்வரும் காலத்தில் பிரித்தானியாவில் அதிக அளவிலான இலங்கை அகதிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளவர்கள், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம் என்று பிரித்தானியாவின் குடிவரவுத்துறை அமைச்சு அண்மையில் அறிவித்தல் விடுத்தது.
இதனடிப்படையிலேயே எதிர்வரும் காலத்தில் பிரத்தானியாவில் அதிக அளவிலான இலங்கையர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்களை பிரித்தானிய குடிவரவு கட்டுப்பாட்டு சபை, அவதானமாக ஆராய்ந்து வருவதாக பிரித்தானிய குடிவரவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment