Saturday, March 30, 2013

பெபிலியானையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் கைது

Saturday, March 30, 2013
இலங்கை::பெபிலியானையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மிரியான விசேட விசாரணை பிரிவினரால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தலையிலான நான்கு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment