Friday, December 14, 2012

போர் விமானங்கள் பறந்ததால் சீனா-ஜப்பான் இடையே பதற்றம்!

Friday, December 14, 2012
டோக்கியோ::சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே சென்காகு தீவு பங்கீடு பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனா விமானம் ஒன்று அந்த தீவின் மீது பறந்ததால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனா - ஜப்பானுக்கு இடையே பங்கீட்டில் பிரச்னை உள்ள சென்காகு தீவின் மீது சீனாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்ததை அடுத்து, ஜப்பான் தனது போர் விமானத்தை செலுத்தியது. அந்த தீவைச் சுற்றி சீனா தனது போர்க் கப்பல்களை நிறுத்த 2 மாத காலமாக முயற்சி செய்து வருகிறது. இருந்த போதும் ஜப்பான் தரப்பில் தற்போதுதான் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், அங்கு பதற்றம் நிலவுகிறது:

No comments:

Post a Comment