Saturday, December 1, 2012

புகலிடம் கோரிய மேலும்மோர் குழுவினர் பப்புவா நியூக்கினி தீவுக்கு அனுப்பிவைப்பு!

Saturday, December 01, 2012
இலங்கை மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த புகலிடம் கோரி அவுஸ்ரேலியா சென்ற 28 பேரைக் கொண்ட குழுவினரை அவுஸ்ரேலியா அரசாங்கம் பப்புவா நியூக்கினி தீவுக்கு அனுப்பியுள்ளது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கையின் படி இரண்டாவது முறையாக புகலிடம் கோரும் குழுவினர் பப்புவா நியூக்கினி தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பப்புவா நியூக்கினி லொம்பரம் கடற்படைத்தளத்தில் ஏற்கனவே 19 புகலிடம்கோருவோர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீவுகளில் அகதிகள் தங்கவைக்கப்படுவதனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் இச் செற்பாட்டை சர்வதேச பொதுமன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.
இதனை மறுத்து அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன், மனித உரிமை கண்கானிப்பாளர்கள் புகலிடம் கோருவோர் கொள்கை தொடர்பாக முன்கூட்டியே ஆராய்ந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment