Tuesday, November 27, 2012

அச்சம் வேண்டாம் தீபங்கள் ஏற்றி விளக்கீட்டை கொண்டாடுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 27, 2012
இலங்கை::பொய்யான வதந்திகளைக் கேட்டு அச்சமடையாமல் மக்கள் தீபம் ஏற்றி கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

குமராலய தீபதினமான இன்றைய தினம் இந்துக்கள் அனைவரும் ஆலயங்களில் தீபங்களை ஏற்றி பக்திபூர்வமாக தமது வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் இயல்பான சமய வழிபாடுகளில் தாராளமாக ஈடுபட்டு விளக்கீட்டு திருநாளை கொண்டாடலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment