Tuesday, November 27, 2012

ராஜிவ் கொலை கைதிக்கு பரோல்!

Tuesday, November 27, 2012
மதுரை::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் இருந்த கைதி ரவிச்சந்திரன் 15 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். சொத்து பிரச்னைக்காக, ரவிச்சந்திரனை, பரோவில் விடுவிக்க, ஐகோர்ட் கிளையில் அவரது தாயார் ராஜேஸ்வரி மனு செய்திருந்தார். அதை ஏற்று, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது; அதன் நிர்வாகிகளிடம் பேசக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன், நவ.,26 முதல் டிச., 10 வரை ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அவர் சிறையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் அருப்புக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment