Wednesday, November 28, 2012

தமிழக மீனவ பிரதிநிதிகள் இலங்கையில்!

Wednesday, November 28, 2012
இலங்கை::இலங்கை இந்திய மீனவர் அமைப்பின் சார்பாக தமிழக மீனவ உறுப்பினர்கள் சிலர் இன்று இலங்கை பிரமுகர்கள் சிலரை  சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக விபரித்துள்ளனர்.
இது தொடர்பாக எமது செய்திச் சேவை தமிழக மீனவ சங்கத்தின் ஆலோசகர் என் தேவதாஸை இணைத்துக் கொண்டு விபரங்களை பெற்றது..

இதனிடையே, இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் துணையுடன் வெளிக்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார்

தமிழக இலங்கை கடற்பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்களே மீன்பிடிக்க கூடிய நிலை உள்ளது.

எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக் கொண்டு, 74 நாட்கள் வீதம் கடலில் மீன்பிடிக்க சென்றால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்கலாம் என்று யுவராஜா யோசனை தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர் அமைப்பின் சார்பாக தமிழக மீனவ உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் மீன்பிடித்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் இவர்கள் பொருளாதார அமைச்சர் பெசில் ராஜபக்ஸவை சந்தித்ததுடன், இலங்கை இந்திய மீனவர் கூட்டமைப்பு சார்பான கூட்டத்திலும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment