Wednesday, November 28, 2012

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு: டிசம்பர் 11-ந்தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும்- தஞ்சை கோர்ட்டு உத்தரவு!

Wednesday, November 28, 2012
தஞ்சாவூர்::தமிழக முதல்- அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக, தஞ்சை கோர்ட்டில் வருகிற 11-ந்தேதி நேரில் ஆஜராக விஜயகாந்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தஞ்சையில் கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசையும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா வையும் அரசு அலுவலர்களையும் விஜயகாந்த் அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் குப்புசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், இது தொடர்பாக வருகிற டிசம்பர் 11-ந்தேதி விஜயகாந்த் நேரில் கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
1-11-12_findyour_INNER_468x60.gif

No comments:

Post a Comment