Wednesday, October 31, 2012

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு;ள்ள இளைஞர் ஒருவர் நீதிமன்றில் மனு தாக்கல்!

Wednesday, October 31, 2012
இலங்கை::பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு;ள்ள இளைஞர் ஒருவர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மதாச நிருபன் என்ற இளைஞரே இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். நிருபனின் தந்தை தர்மதாச, சட்டத்தரணி கே.கணேசயோகனின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொரளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி லொக்குஹெட்டிஹேவா, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, மேலதிக பாதுகாப்புச் செயலாளர் எம்.எஸ். ரட்நாயக்க, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கணனிப் பயிற்சி நெறியொன்றை பூர்த்தி செய்து கொழும்பில் காத்திருந்த நிருபனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். எந்தவிதமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாது மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைத்திருப்பதாக நிருபன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட காலத்தில் மோசமான முறையில் தாக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகாரிகள் பலவந்தமான முறையில் பல்வேறு ஆவணங்களில் தம்மிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment