Wednesday, October 31, 2012

கார்த்திகை மாதம் மாவீரர் மாதமா? (புலிபினாமி)சீமானுக்கு ஓர் கடிதம்-ரொறொன்ரோ ஐயாத்துரை

Wednesday, October 31, 2012
ரொறொன்ரோ எனக்காக ஒரே ஒரு ரசிகன் அந்தப் பிரமாண்டமான றொஜேர்ஸ்மண்டபத்தில் காத்திருந்தாலும்                                                                   அவனுக்காக ஐந்து மணி நேரம் அவன் எழுந்து போகும்வரை ஐந்து மணி நேரம் இசை நிகச்சி நடத்துவேன்!
-இசைஞானி இளையராஜா


சீமான் அவர்களே கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதம் என்று யார் பிரகடனம் செய்தது? எமது இலங்கை மக்களுக்கு எது செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று கட்டளையிட நீர் யார்? நீர் தமிழ் மக்களின்பிரதி நிதியா? புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உற்வினர்கள் மாவீரர்கள் ஏறுக் கொள்வார்களா? இளையராஜாவின் நிகழ்ச்சியைத் தவிர கனடாவிலும் சரி ஏனைய நாடுகளிலும் சரி தமிழ் மக்கள் கார்த்திகை மாதத்தில் விழாக்கள் நடாத்துவதில்லையா? இங்கு அரங்கேற்ற நிகழ்ச்சிகள், ஊரவர்களின் நிகழ்ச்சிகள் கார்த்திகை மாதம் முழுவதும் நடைபெறுகிறது.யூத இனத்தையும் தமிழர்களையும் ஒப்பிடுகிறீர்! யூத இனம் தனது இனத்தைக் கொலை செய்ததாக வரலாறு உண்டா? இலங்கை நாட்டில் தமிழர்களுக்கு விடுதலை வேண்டிப் புறப்பட்ட இயக்கங்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்ததே சக தமிழர்களைக் கொன்றுதான் என்ற வரலாறு சீமான் அவர்களே உமக்குத் தெரியுமா? அரசாங்கத்தையும் ஏனைய இயக்கங்களையும் விட புலிகள் இயக்கம்தான் தமிழர்களை அதிகம் கொன்றார்கள் என்பது உமக்குத் தெரியாதா? புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் பட்டியல் உமக்கு வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம். ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றவர்களுக்காக தமிழ் மக்கள் கார்த்திகை மாதம் முழுவதும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா? புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு இன்றுவரை தங்கள் உறவுகள் இருக்கிறார்களா?இல்லையா? என்று தவித்துக் கொண்டிருக்கும் எத்தனை குடும்பங்களை எங்களால் காட்ட முடியும். தங்கள் உறவுகளுக்கு இறுதிக் கிரியைகள் கூட அவர்களால் செய்ய முடியாத உணர்வுகளை சீமான் அவர்களே உமக்குத் தெரியுமா? அந்தக் குடும்பங்கள் கார்த்திகை மாதத்தை புனித மாதமாக கொண்டாடுவார்களா? யூத இனத்தை கொலை வெறியுடன் அலையும் தமிழ் இனத்துடன் ஒப்பிட்டால் உம்மை விட முட்டாள் உலகத்தில் வேறு யாராக இருக்க முடியும்! புலிகள் இயக்கம் அழிந்தபின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அதையிட்டுக் கவலைப்படுவதாக அறிந்தீரா? உம்மால் முடிந்தால் ஒருமுறை இலங்கை சென்று தமிழ் மக்களைச் சந்தித்துவிட்டு வாரும். வன்னிக்குச் சென்றால் அங்கு யுத்தத்தின்போது தப்பிச் செல்ல முற்பட்டபோது புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் உறவுகளைச் சந்தித்தால் அவர்களிடமிருந்து உண்மைகளை அறிந்து கொள்ளலாம். உம்மால் இலங்கை செல்ல முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். சீமான் அவர்களே நீர் கனடா வந்தபோது உமது கொலை வெறியை கண்ட கனடா அரசாங்கம் உம்மை நாடு கடத்தியது. அந்த வயித்தெரிச்சலில்தான் நீர் உந்தக் குரைப்புக் குரைக்கிறீர்.
புலிகளிடமிருந்து பிரிந்து சென்று கருணாவுடன் இணைந்ததால் நித்திரைப்பாயில் வத்தும் மட்டக்களப்பில் வெருகல் ஆற்றங்கரையில் வைத்தும் புலிகளால் கொல்லப்பட்ட பிள்ளைகளை நீங்கள் மாவீரர் வரிசையில் சேர்க்கிறீர்களா? அல்லது துரோகிகள் வரிசையில் சேர்க்கிறீர்களா? பல இளைஞர்கள், யுவதிகள் தமிழீழம் கிடைக்கும் என்று பிரபாகரனை நம்பி தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள் என்பதை நாங்கள் மறுக்கவேயில்லை. அதற்காக வன்னியில் ஏற்பட்ட பேரழிவிற்கு இலங்கை அரசாங்கத்தின் மேல் மட்டும் பழியைப் போட்டு தமிழர்களின் அடிப்படைச் சுதந்திரங்களை எதிர்ப்பது உமது முட்டாள்த்தனம் என்பதை அறியத் தருகிறோம்.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதமா? (புலிபினாமி) சீமானுக்கு ஓர் கடிதம்-ரொறொன்ரோ ஐயாத்துரை:


எனக்காக ஒரே ஒரு ரசிகன் அந்தப் பிரமாண்டமான றொஜேர்ஸ்மண்டபத்தில் காத்திருந்தாலும் அவனுக்காக ஐந்து மணி நேரம் அவன் எழுந்து போகும்வரை ஐந்து மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்துவேன்!

-இசைஞானி இளையராஜா

No comments:

Post a Comment