Tuesday, October 30, 2012

ஐ.நா.சபையில் மனித உரிமை மீறல் விசாரணை; 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும் - கருணதிலக அமுனுகம!

Tuesday, October 30, 2012
இலங்கை::நவம்பர் 1ம் திகதி முதல் ஐ.நா மனித உரிமை பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயார் என வெளி விவகார அமைச்சின் செயலாளர் கருணதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அகில கால மீளாய்வு அமர்வுகளில் 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும் என அவர் தெரிவித்துள்ளார்.

அகில கால மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளதுடன் இதில் 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கை தன்னார்வ அடிப்படையில் எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment