Wednesday, October 31, 2012

» 2ம்இணைப்பு-முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துடன் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பா?

Wednesday, October 31, 2012
புதுடில்லி::முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளின் படுகொலைச் சம்பவத்துடன்  முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு உண்டா என முன்னாள் சீ.பி.ஐ அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் n;தாடர்பில் கே. ராகுதாமன் என்ற சீ.பி.ஐ. அதிகாரி புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி கருணாநிதியும், ஸ்ரீபெரம்பத்தூரில் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்ததகாக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாநிதி ஏன் இந்தக் கூட்டத்தை ரத்து செய்தார் என்பது பற்றி இதுவரையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரம்பத்தூர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என கருணாநிதி ஆலேசானை வழங்கியிருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கார்த்திகேயன் என்ற அதிகாரி இது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டாம் என தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரச்சார நோக்கில் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகுதாமன் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக உயர் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பான முக்கியமான சாட்சியமாக இருந்த வீடியோ நாடாவை, புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த எம்.கே. நாரயணன் காணாமல் போக செய்துள்ளதாகவும் புதிய நூலில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளின் தாணு உள்ளிட்ட குழுவினர் இரண்டரை மணிநேரம் ஸ்ரீபெரம்புத்தூரில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளமை அந்த வீடியோ நாடாவில் பதிவாகியுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவினர், வீடியோ பிரதியின் மூலப் பிரதியை பெற்று கொண்டு வேறு ஒரு பிரதியை காவற்துறையினருக்கு வழங்கியிருப்பதாக நூலை எழுதியுள்ள கே.ர. கௌதமன் தகவல் வெளியிட்டுள்ளார். வீடியோ பிரதி காணாமல் போனமைக்கு பொறுக் கூற வேண்டிய நாராயணன் தற்போது மேற்கு வங்கத்தின் ஆளுநராக பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment