Wednesday, October 31, 2012

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவருகின்ற கடும் மழையினால் 261 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதுடன், 54 வீடுகள் சேதம்!

Wednesday, October 31, 2012
இலங்கை::கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவருகின்ற கடும் மழையினால் 261 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதுடன், 54 வீடுகள் சேதமடைந்திருப்பதாக கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

உடுநுவர, ஹாரிஸ்பத்துவ, கங்கவட்டகோரளை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கரல்லியத்த எனுமிடத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கு அருகிலுள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்து தெல்தெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டிருப்பதாகவும் கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

இன்னும் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக குறிப்பிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரத்ன, மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment