Saturday, September 29, 2012
சென்னை::புலிகள் இயக்கம் இந்தியாவுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பதாக, மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புலிகள் இயக்கத்துக்கு எதிராக இந்திய அரசாங்கம் இரண்டு வருட தடையை நீடித்துள்ளது.
இது நியாயமானதா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தீர்ப்பாயம் நேற்றைய தினம் சென்னையில் கூட்டப்பட்டது.
இதில் கருத்து வெளியிட்ட இந்தியாவின் சர்வதேச பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் ஆர்.கே.சுமன், புலிகள் தமிழகத்தை தளமாக கொண்டு மீண்டும் ஒன்றிணைய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டின் சில ஒழுங்கமைப்புகளின் ஒத்துழைப்புடன் புலிகள் மீளிணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து புலிகள் செயற்பட்டு வருவதாகவும் மத்திய அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும், தமிழீழத்தை அடையும் அவர்களின் குறிக்கோளை அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்றும் ஆர்.கே.சுமன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு தொடர்ந்தும் புலிகள் அமைப்பு அச்சுறுத்தலாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீர்ப்பாயம் இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.
No comments:
Post a Comment