Wednesday, September 26, 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் குண்டு தாக்குதல்கள்!

Wednesday, September 26, 2012
இலங்கை::ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீட்டின் சாய்ந்தமருதில் உள்ள இல்லத்திற்கு இன்ற அதிகாலை இனந்தெரியாத குழுவினால் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் இல்லத்திற்கும் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment