Friday, September 28, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற்படையினரால் கைது!

Friday, September 28, 2012
இலங்கை::சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேரை தொடுவாவ கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற இந்த 77பேரில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் இரு முஸ்லிம்கள் அடங்குவதோடு, பெண்ணொருவரும் அவரது கைக்குழந்தையும் இக்குழுவில் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள், முகத்துவாரம் முறைமுகத்தக்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வப் பிரிவினர் அவர்களிடம் மேலதி விசாரணைகளை நடத்தி வருவதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறினார்

No comments:

Post a Comment