Friday, September 28, 2012

துப்பாக்கி முனையில் ரூ.5 கோடி கொள்ளை;டெல்லியில் துணிகரம்!!

Friday, September 28, 2012
புதுடெல்லி:: டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.5 கோடி வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி ஊழியர்கள் ஏ.டி.எமில் பணம் போடுவதற்காக வேனில் வங்கி பணத்தை கொண்டு சென்றுள்ளனர்.


அப்போது திடீரென்று வந்த மர்ம நபர்கள், வேனிலிருந்த காவலரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, பணம் இருந்த வேனிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் பரபரப்பான டிபன்ஸ் காலனியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தப்பிச்சென்ற மர்ம மனிதர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட காவலர் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment