Thursday, August 30, 2012

சீன பாதுகாப்பு அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதியை சந்திப்பு!

Thursday, August 30, 2012
இலங்கை::சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாங்கு குவாங்லி நேற்று(ஆகஸ்ட்-29) அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார்.

ஜெனரல் குவாங்லி தலைமையிலான 23 பேரைக்கொண்ட சீன நாட்டின் குழுவினர், ஐந்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று(ஆகஸ்ட்-29) இலங்கைக்கு வந்துள்ளனர்.

இச் சந்திப்பில் ஜனாதிபதிக்கும் ஜெனரல் குவாங்லிக்கும் இடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுக்கும் சந்தர்ப்பங்களின் இலங்கைக்கு பக்கபலமாக இருந்தமைக்காக சீன அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது சீனக் குழுவினர் சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் ஊழியர்கள் கல்லூரி, பனான்கொடையில் உள்ள இராணுவ கண்டோன்மென்ட் மற்றும் கொழும்பில் உள்ள பாதுகாப்புச் சேவைக் கல்லூரி ஆகியவற்றிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதிக்கும் சீன பாதுகாப்பு அமைச்சருக்குமிடையே நினைவுச்சின்னங்களும் பறிமாறப்பட்டன.

No comments:

Post a Comment