Wednesday, August 29, 2012

பிரணாப் முகர்ஜி போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொன்ன தகவலால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்: கருணாநிதி விளக்கம்!

Wednesday, August 29, 2012
சென்னை::இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, பிரணாப் முகர்ஜி போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொன்ன தகவலால் சென்னை மெரினா கடற்கரையில் நான் இருந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுத் திரும்பினேன் என்று கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக செயற்குழுவில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பதிலடியாக இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

"மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!” என்று தலைப்பிட்டு கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இனக்கலவரப் போரின் போது, தான் மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியலிட்டு கருணாநிதி கூறியிருப்பவை...

"இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது நான் எதுவும் செய்யவில்லை என்கிறார் ஜெயலலிதா.

14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்,

24-10-2008 அன்று மனிதச் சங்கிலி,

12-11-2008 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம்,

4-12-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரோடு சந்திப்பு,

27-12-2008 அன்று தி.மு. கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்,

28-3-2009 அன்று பிரதமருக்கும், சோனியா விற்கும் கடிதம்,

7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் ஆகியோருக்கு தந்தி,

9-4-2009 அன்று சென்னையில் பேரணி,

21-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி ஆகியோருக்கு மீண்டும் தந்தி,

23-4-2009 அன்று தமிழகத்தில் “பந்த்”,

24-4-2009 அண்ணா அறிவாலயத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் சந்திப்பு,

27-4-2009 அன்று உண்ணாவிரதம்

- இவை எல்லாம் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நான் எடுத்த நடவடிக்கைகள்!

ஆனால் என்னைக் குற்றஞ்சாட்டி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா செய்தது என்ன?

14-10-2008 அன்று கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் “கண்துடைப்பு நாடகம்” என்று கூறி அதனைப் புறக்கணித்தார்.

15-10-2008 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன.

போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது

ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல” என்று என்னைத் தாக்கி அறிக்கை விட்டதைத் தவிர வேறு எதையும் ஜெயலலிதா செய்ய வில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாத ஜெயலலிதா, தற்போது அவரது கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம்

என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

அந்தத் தீர்மானத்தில் போர் முடிந்து விட்டதாக பொய்யான தகவலைக் கூறி நான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதாக சொல்லியிருக்கிறார். நான் உண்ணாவிரதம் இருந்த 27- 4-2009 அன்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

"நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.” இவ்வாறு இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும், மேலும் “குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்” என்றும், “போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்றும் “போர் முனையிலிருந்து வெளி வந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டுமன்றி; போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங் களுக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்” என்றும், இலங்கை அரசு கூறியிருப்பதாகத் தெரிவித்த பிரணாப் அவர்கள், அந்த அறிக்கையில், “போர்ப் பகுதியிலிருந்து வெளிக் கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்க ளுக்குத் தேவையான நிவாரண உதவி களை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள் ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும், அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்கு களங்கம் கற்பிக்க முயலுகிறார் முதல்வர் ஜெயலலிதா

- என்று உண்ணாவிரதத்தை உடனே வாபஸ் பெற்றதற்கு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment