Thursday, August 30, 2012

ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் குழந்தைகள் காப்பகங்களுக்கு 34 சலவை எந்திரங்கள்: ஜெயலலிதா உத்தரவு!

Thursday, August 30, 2012
சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

சமூகநல இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 27 அரசு குழந்தை காப்பகங்கள் மற்றும் 7 சேவை இல்லங்கள் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழைக் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உணவு, உறைவிடம், சீருடைகள் மற்றும் கல்வி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகள் தங்கள் துணிகளை தாங்களே துவைத்துக் கொள்வதால், அவர்கள் பயிலும் நேரம் வீணாகிறது. எனவே, இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் பணிச் சுமையினை குறைக்கும் வகையிலும், துணி துவைக்கும் நேரத்தினை கல்விக்காகவும், ஒய்விற்காகவும் செலவிட ஏதுவாகவும், தமிழ்நாட்டில் உள்ள 27அரசு குழந்தை கள்காப்பகங்கள் மற்றும் 7 அரசு சேவை இல்லங்களுக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடிய தரம் வாய்ந்த 34 சலவை இயந்திரங்களை தலா 3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் வாங்கி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கென 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் மூலம், அரசு காப்பகங்களில் உள்ள குழந்தைகள், தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில், தங்களது கல்வியில் தனிக் கவனம் செலுத்தி நன்முறையில் தேர்ச்சி பெற வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment